புரட்டாசி சனிக்கிழமையன்று பொள்ளாச்சி அருகே ராமர் கோவிலில் பக்தர்கள் திரள் - வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கொங்கு மண்டல பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமர் பண்ணை ராமர் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.



இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சுப்பேகவுண்டன்புதூர் மற்றும் நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த பாரதி வள்ளி கும்மியாட்ட கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மியாட்டத்தில், வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர். இந்த அற்புதமான கலை நிகழ்ச்சியைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை கொண்டாட்டங்களும், பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் இணைந்து, மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் ஒரு விழாக்கோலம் நிலவியது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...