உடுமலை திருப்பதி கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.



கோவில் நுழைவாயில் பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளை சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



இன்று காலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். சாமி தரிசனத்துக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி கோவில் நிர்வாகம் முன்னதாகவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...