திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: இந்து மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பூஜை

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சையை கண்டித்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையைக் கண்டித்தும், கோயில் புனிதத்தைக் காக்கவும் இந்து மக்கள் கட்சி சார்பாக கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில், கோயில் புனிதத்தை கெடுக்கும் கயவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வுக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை பிரசாதமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு எதிராக தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், கோயில்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...