பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் மீது குடியிருப்புவாசி தாக்குதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட 45 வயது நபரை குடியிருப்புவாசி ஒருவர் தாக்கி விரட்டினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், ரங்கம்மாள் கோவில் தெருவில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தெருவில் நின்று கொண்டு, கோலமிடும் பெண்கள், கடைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து தனது கால்சட்டையைக் கழற்றி நடுவீதியில் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர், அந்த நபரை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

விசாரணையில், இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...