கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் GKNM மருத்துவமனை மற்றும் LMW நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடத்தியது. இதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ தொலைவு ஓட்டம், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 கி.மீ ஓட்டம், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. 5 மற்றும் 10 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்தம் ரூ.75,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மூலம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...