வால்பாறையில் மின் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

வால்பாறையில் செப்டம்பர் 30 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெறும். பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.


Coimbatore: வால்பாறை பகுதியில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், அய்யர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டாரப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிகள் வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.

மேலும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அங்கலக்குறிச்சி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இதனால் அவ்வப்போது மின் தடை ஏற்படலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மின் தடை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து, தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...