உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: பொள்ளாச்சியில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கௌதம், நகரத் திமுக துணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் என பலரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...