மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் ஆண்டு BMKC கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை இலுப்பம்பாளையம் கிராமத்தில் BMKC என்ற கபடி குழுவினர் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் பகல் இரவு நடைபெற்ற இந்த கபடி போட்டியில், இறுதிப் போட்டிக்கு சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கபடி அணியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.கே.சி அணியும் தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங்காபுரம் கபடி அணியினர், ஈரோடு அணியை 46-28 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் பரிசை வென்றனர். முதல் பரிசு பெற்ற லிங்கபுரம் அணிக்கு ரூ.30,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.20,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தை சேலத்தின் சாமி அகாடமி அணியும், நான்காவது இடத்தை கே.சி.கே கனுவாய் அணியும் பெற்றன. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...