கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோய் பற்றிய முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி இன்று காலை துவங்கியது. இந்த கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள், மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை மற்றும் ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனை குறித்தும் விளக்கப்படுகிறது.



கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்களை நீக்கும் வகையில் மருத்துவ ஆலோசகர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கின்றனர். மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதையும், மார்பகங்களை சீரமைக்கும் முறைகளையும் பற்றி விளக்குகின்றனர்.

கங்கா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் உடன் இணைந்து "சக்தி" என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை 89 முகாம்களில் 4505 பெண்கள் பரிசோதிக்கப்பட்டு, 58 பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அக்டோபர் 31 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கங்கா மருத்துவமனையின் கீழ்தளம், பி பிளாக்கில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...