ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்பிரச்சாரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் ஆகியோர் பங்கேற்றனர்.



டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் தொடங்கி வைத்தார். 2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான "மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது" என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது.

இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் கூறுகையில், தாமதமாக திருமணம் செய்து கொள்வது, கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது, புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் நகர்புற பெண்கள் அதிக அளவில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்தியாவில் 50 சதவீதம் மார்பக புற்று நோய்கள் புற்றுநோய் மேம்பட்ட நிலைகளில் (நிலை 3 அல்லது 4) கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் இந்த நிலையில் (நிலை 3 அல்லது 4) புற்றுநோய் கண்டறியப்பட்டால், 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.



முறையாக உடற்பயிற்சி செய்வது, மதுப்பழக்கத்தை கைவிடுவது, கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் Dr.குகன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...