மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு எதிராக கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விஸ்வகர்மா சமூகம் குறித்த கருத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்திருந்தபோது, "விஸ்வகர்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை பாரம்பரிய தொழிலும் அல்ல" என்று கூறியதற்கு எதிராக, தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய நிதி அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அவற்றில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஸ்வகர்மா சமுதாயம் ஒன்று இல்லை என்று கூறியதை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பார்பர் விஸ்வகர்மா என்ற தபால் தலையை திரும்ப பெற வேண்டும், இந்திய அரசாங்கம் விஸ்வகர்மா சமூகத்தை தேசிய சமூகமாக அறிவிக்க வேண்டும் என்பன அடங்கும்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய நிதி அமைச்சரின் கருத்து மிகவும் தவறானது என்றும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கூறினார். கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், தச்சு, தங்க நகை, பாத்திரம், இரும்பு மற்றும் சிற்பம் ஆகிய ஐந்து தொழில்களை செய்பவர்கள் மட்டுமே விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்றும், மத்திய அரசின் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 தொழில் செய்பவர்களை சேர்ப்பது நியாயமற்றது என்றும் பாண்டியன் கூறினார்.

இறுதியாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...