சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ரோட்டரி சங்கம் கௌரவிப்பு

கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வயநாடு நிவாரணம், கோவை சிசிடிவி திட்டம் மற்றும் மாணவர் விஞ்ஞான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அக்டோபர் 1 அன்று கலைஞர் கருணாநிதி கல்லூரியில் நடைபெற்றது.

லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கிய நன்கொடையில், வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு ரூ.2 கோடியும், கோவை 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சிசிடிவி பொருத்தும் பணிக்கு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிஷன் ரூமி-2024' திட்டத்தின் கீழ் 6000 அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் உருவாக்கத்திற்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

ரோட்டரி சங்கத்தின் TRF கருத்தரங்கில், "நம்பிக்கையின் மலர்கள்" எனும் தலைப்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் ரோட்டரி ஆளுநருமான சுந்தர வடிவேலு, வழக்கறிஞர் முருகாம்பாள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் பிளாட்டினம் சேர் சர்கிள் ரவிசங்கர், இலங்கையைச் சேர்ந்த கௌரி ராஜன், புப்புடு டி சொய்சா, சகுந்தலா ராஹா, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் (இந்தியா), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பி.டி.ஜி. எம். ஜோஸ் சாக்கோ, செல்ல ராகவேந்திரா, பத்மகுமார், ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...