அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி ஏற்பை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீண்டும் பதவி ஏற்பை முன்னிட்டு ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கோவை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பணியாற்றி, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 99% வரலாற்று வெற்றியை பெற்று தந்தவர் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அமலாக்க துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை பெற்று மீண்டும் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனைக் கொண்டாடும் பொருட்டு கோவையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் ஆலோசனைப்படி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீகாந்த் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல்சாமி, 5-வது வார்டு துணை செயலாளர் சுந்தரராஜ், கார்த்திக், நகர் மற்றும் பகுதி கழக உடன் பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...