கோவையில் திடீர் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் திடீர் ஆலங்கட்டி மழை பெய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இம்மழை மக்களை மகிழ்வித்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இந்த ஆலங்கட்டி மழை அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 3 முதல் 5 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையின் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



பிற்பகல் 1:00 மணி முதல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.



இந்த எதிர்பாராத ஆலங்கட்டி மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...