கோவை மேயரின் கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயர் ரங்கநாயகியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும்.


கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்திலிருந்து 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 அன்று ரத்து செய்தது.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருவதாகவும், எந்த ஒரு புதிய திட்டத்தையும் வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் விமர்சித்தார்.

இதனால் இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.

தன்னை சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி, பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 3 அன்று மேயர் பிறப்பித்த உத்தரவை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதன் மூலம் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...