உடுமலை அருகே போலி பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர் சுகுணா, உரிய கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒப்புக்கொண்டார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் வீர காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுகுணா என்ற ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர், தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அறையில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகாராஜன் முன்னிலையில் சுகுணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், உரிய கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை சுகுணா ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில், நேற்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் சுகுணா மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், உரிய தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...