கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

கோவையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்து வரி உயர்வு எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் குறித்து எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு ரத்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின்படி கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறினார். அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி 70% முடிந்துவிட்டதாகவும், விரைவில் முழுமையாக முடிவடையும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரியை உயர்த்தியதையும், வரி செலுத்த தாமதமானால் வட்டி வசூலிக்கப்படும் என்ற நிலையை உருவாக்கியதையும் அவர் கண்டித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரும் அக்டோபர் 8 அன்று மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

அக்டோபர் 17 அன்று அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை கோவையில் உள்ள மூன்று மாவட்டங்கள் சார்பாகவும் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக வேலுமணி தெரிவித்தார். மேலும், திமுக அரசு கோவைக்கு எந்தத் திட்டமும் தரவில்லை என்றும், மக்கள் கடுமையாக அவதியுற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

"கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போகும் சூழலில் இருக்கிறது. அவற்றைக் காப்பாற்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என வேலுமணி வலியுறுத்தினார். சொத்துவரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...