சூலூரில் திடீர் வாகன சோதனை: 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிப்பு

கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 4) இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...