வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி: முதியவர் காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் 71 வயது முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டவர், வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை நிலுவை, வீடு மற்றும் ஆவணங்கள் அபகரிப்பு குறித்து விசாரணை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பழனிசாமி, தனது வீட்டை வாடகைக்கு விட்டவர்கள் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பழனிசாமியின் புகார் மனுவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை (A Block 8) ஜன்னத் என்பவருக்கு மாதம் ₹2,500 வாடகைக்கு விட்டுள்ளார். Green Garden சங்கத்தைச் சேர்ந்த முத்தப்பா என்கிற அப்துல் ரகுமான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், ₹75,000 முன்பணமாக பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜன்னத் முறையாக வாடகை செலுத்தாததால், பழனிசாமி நிலுவைத் தொகையை கேட்டபோது, எழுத படிக்கத் தெரியாத தன்னிடம் முத்தப்பா வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜன்னத் ₹1,36,500 வாடகை நிலுவை வைத்துள்ள நிலையில், ஜன்னத்தும் முத்தப்பாவும் சேர்ந்து தனது வீட்டையும் ஆவணங்களையும் அபகரித்துக் கொண்டதாக பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் இருவரும் சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் பழனிசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பழனிசாமிக்கு மாற்றுத்திறனாளி மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். வீடு மாடியில் இருப்பதால் ஏற்பட்ட சிரமத்தால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...