வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி: முதியவர் காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் 71 வயது முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டவர், வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை நிலுவை, வீடு மற்றும் ஆவணங்கள் அபகரிப்பு குறித்து விசாரணை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பழனிசாமி, தனது வீட்டை வாடகைக்கு விட்டவர்கள் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பழனிசாமியின் புகார் மனுவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை (A Block 8) ஜன்னத் என்பவருக்கு மாதம் ₹2,500 வாடகைக்கு விட்டுள்ளார். Green Garden சங்கத்தைச் சேர்ந்த முத்தப்பா என்கிற அப்துல் ரகுமான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், ₹75,000 முன்பணமாக பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜன்னத் முறையாக வாடகை செலுத்தாததால், பழனிசாமி நிலுவைத் தொகையை கேட்டபோது, எழுத படிக்கத் தெரியாத தன்னிடம் முத்தப்பா வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜன்னத் ₹1,36,500 வாடகை நிலுவை வைத்துள்ள நிலையில், ஜன்னத்தும் முத்தப்பாவும் சேர்ந்து தனது வீட்டையும் ஆவணங்களையும் அபகரித்துக் கொண்டதாக பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் இருவரும் சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் பழனிசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பழனிசாமிக்கு மாற்றுத்திறனாளி மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். வீடு மாடியில் இருப்பதால் ஏற்பட்ட சிரமத்தால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...