கோவை மத்திய சிறை இடமாற்றம்: விரிவான திட்ட அறிக்கை தயார் - சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை மத்திய சிறையை பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 95 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.


Coimbatore: கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்யும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு வரும் மத்திய சிறையை இடமாற்றம் செய்துவிட்டு, இந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கரில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் செம்மொழிப் பூங்கா வளாகம் கட்டுமானப் பணி கடந்தாண்டு இறுதியில் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை வளாகத்தின் மற்றொரு பகுதியில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரமடை அருகே பிளிச்சி என்ற பகுதியில் சிறை வளாகம் கட்ட போதிய இடம் இருப்பது கண்டறியப்பட்டு, சிறை வளாகத்துக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை உயரதிகாரிகள் கூறும்போது, "சிறைச்சாலையை ஒட்டிய இடங்களில் அடுத்தடுத்து திட்டப்பணிகள் தொடங்குவதால் சிறைச்சாலையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிளிச்சி பகுதியில் சிறைச் சாலை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 95 ஏக்கர் பரப்பளவில் சிறைக் கட்டிடங்கள் கட்டப்படும்" என்றனர்.

மேலும் அவர்கள், "கைதிகள் தங்குவதற்கான கட்டிடங்கள், அவர்கள் பணிபுரியும் தொழிற்கூட கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு வெளியானதும், கட்டுமானப் பணிக்கு தேவையான தகுந்த நிறுவனம், தொடர்புடைய துறையின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...