ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற பயிலரங்கமும் நடத்தப்பட்டது.


கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, நிர்வாக மருத்துவ இயக்குனர் Dr. சந்தோஷ் குமார் டோரா, மருத்துவ இயக்குனர் - (Operations) Dr.சந்தோஷ், இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம், ஹார்ட் பெயிலியர் கிளினிக் மற்றும் எக்கோ கார்டியாலஜி துறை தலைமை மருத்துவர் Dr. சண்முகசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.



நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரத்தியேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துவக்க விழாவின்போது, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்த மருத்துவத் தொடர் கல்வி (CME) பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் இருதியவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விளக்கப்படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம் கூறுகையில், "நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் சிறந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் பயனடையும் வகையில் இந்த கிளினிக் துவங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் அத்தகைய அறிகுறி தென்படும் போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த பிரத்தியேக கிளினிக்கை துவங்குவதன் மூலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான விரிவான சிகிச்சையை வழங்குவதில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னணி பங்கு வகிக்கும் எனலாம்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...