உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.



கோவை: தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.



மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாடு செய்த இந்த பந்தயத்தை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விதவிதமான மோட்டார் சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். 16 வகையான பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மண்புழுதியை கிளப்பியபடி சீறிப்பாய்ந்த மோட்டார் சைக்கிள்களைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...