கோவை செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற 24 வயது இளைஞர் மற்றும் அவரது 8 வயது மருமகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மற்றும் அவரது மருமகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை மார்க்கெட் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த பாரிஸ் அகமத் (24) என்ற இளைஞர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவரது அக்காள் மகன் ஹயான் அஹமத் (8) இரண்டாம் வகுப்பு மாணவனாக இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி குனியமுத்தூர் செங்குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலையடைந்த உறவினர்கள் சுற்றுப்புற பகுதிகளில் தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அடுத்த நாள் அக்டோபர் 5ஆம் தேதி செங்குளம் அருகே ஒரு மோட்டார் சைக்கிள், செருப்புகள் உள்ளிட்ட உடைமைகள் கிடந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் குளத்தில் தேடுதல் நடத்தியபோது, பாரிஸ் அகமத் மற்றும் ஹயான் அஹமத் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இருவரின் சடலங்களும் கோவை ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. உறவினர்கள் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரும் மீன் பிடிக்க முயன்றபோது குளத்தில் தவறி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...