உடுமலை அருகே பூளவாடியில் மருந்து தெளித்ததால் கருகிய தக்காளி செடிகள்: விவசாயி வேதனை

உடுமலை அருகே பூளவாடியில், விவசாயி மாசிலாமணி தெளித்த மருந்தால் தக்காளி செடிகள் கருகின. விளைச்சலுக்கு தயாராய் இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த சேதம், விவசாயியின் நெஞ்சில் இடியாய் இறங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் விவசாயி மாசிலாமணி பயிரிட்டிருந்த தக்காளி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானதால், அவர் தெளித்த மருந்தால் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பெரும் அளவில் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், விவசாயி மாசிலாமணியின் தக்காளி செடிகளில் லேசான நோய் தாக்குதல் ஏற்பட்டதால், அவர் உடுமலையிலுள்ள வேலன் என்ற தனியார் நிறுவனத்தில் மருந்து வாங்கி தெளித்தார்.



மருந்து தெளித்தால் தக்காளி செடிகள் நோய் நீங்கி சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கையில் இருந்த மாசிலாமணியின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மருந்து தெளித்த சில நாட்களிலேயே தக்காளி செடிகள் கருக ஆரம்பித்தன.



விளைச்சலுக்கு தயாராக இருந்த தக்காளிகள் வாடியதோடு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் தக்காளி சாகுபடியில் பெரும் நட்டமும் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலைத்துறையினர் மற்றும் மருந்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மருந்து தெளிப்பால் தக்காளி செடிகள் கருகியதா என கண்டறிய வேளாண்மை துறை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் தரும் அறிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...