உடுமலையில் முறைகேடாக செயல்படும் மதுபானக் கூடங்களில் விதிமீறி மது விற்பனை

உடுமலையில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்கின்றன. பொதுமக்கள் அதிருப்தியுடன் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் முறையான அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனுஷம் திரையரங்கம் பின்புறம், ராஜேந்திர ரோடு பூங்கா எதிரில், அர்பன் வங்கி எதிரில், தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே அனுமதியற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூடங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையும் மது விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.



இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உடுமலை காவல்துறை மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...