கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை பணிகள் தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாயக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் PRG அருண்குமார் MLA முன்னிலையில் தொடங்கியது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கம்பாளையம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



முதல் திட்டத்தின் கீழ், சபரி நகர் முருகன் வீடு முதல் ரங்கசாமி வீடு வரை மற்றும் திரிங்கா நகர் ரங்கராஜ் வீடு முதல் தினகரன் வீடு வரை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இரண்டாவது திட்டத்தின் கீழ், பாலமலை மெயின் ரோடிலிருந்து அசோகன் வீடு வரையில் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.



இந்த இரண்டு திட்டங்களுக்கும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG அருண்குமார் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி, கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...