சூலூரில் 14 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது: வாகனங்கள் பறிமுதல்

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். 14 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்டோபர் 7 ஆம் தேதி சூலூர் காவல் நிலைய தனிப்படை போலீசார் முத்துகவுண்டன்புதூர் அருகே சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (45) மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிரதீப் (45) என அடையாளம் காணப்பட்டனர்.

கைதான நபர்களிடமிருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...