வடகிழக்கு பருவமழை: பேரிடர் புகார் அளிக்க எளிய முறை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம், TN Alert செயலி மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பேரிடர் குறித்து புகார் அளிக்கவும், மழையின் அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவும் பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்களும், பல துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக்குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 66 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 'TN Alert' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகள், தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம், பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய அறிவுரைகள் ஆகியவற்றை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் எளிதாக புகார் அளிக்க முடியும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...