தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்புக்கு மட்டுமே வரியில்லை - பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசின் வரி உயர்வுகளை கடுமையாக விமர்சித்தார்.


Coimbatore: பொள்ளாச்சியில் அக்டோபர் 8 அன்று, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர வேறு எந்தத் திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். புதிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர்த் திட்டங்கள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயராமன் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.

"சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கும் இறப்பவர்களுக்கும் மட்டுமே வரியில்லை. இதைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்திவிட்டது," என்று பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்தார்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...