கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 206 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி விழாவில் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.



Coimbatore: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி 206 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயகர் கனகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...