உடுமலையில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் கஞ்சா மற்றும் மது போதை பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்", "வேதனையாச்சி வேதனையாச்சு விடியா தி.மு.க ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சு", "கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு", "ஏறிப்போச்சு ஏறிப்போச்சு மின் கட்டண வரி சொத்து வரி ஏறி போச்சு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.



மேலும், சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கண்டித்து, "ஸ்டாலின் அரசே பதவி விலகு" என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், பிரனேஷ் மற்றும் நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...