பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் டாக்டர் மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.



மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் மணிவண்ணன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜதரங்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



முன்னதாக மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி கோட்ட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலக்காடு சாலை, கோவை சாலை வழியாக சென்று மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் சுய பரிசோதனை செய்வதோடு, ஏதாவது அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், டாக்டர் மனீஷ் கேன்சர் மையத்தில் நடைபெறும் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாமை பெண்கள் முற்றிலும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...