கோவை தியாகி சண்முகா நகரில் குடியிருப்போர் கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக செயலாளர் நா.கார்த்திக்

கோவை தியாகி சண்முகா நகரில் திமுக செயலாளர் நா.கார்த்திக் குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பூங்கா, மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி-2, வார்டு எண் 61, திருச்சி சாலையில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, புதிய பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை குடியிருப்போர் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக நா. கார்த்திக் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, வட்டக்கழக செயலாளர்கள் தென்னவர் செல்வராஜ், அன்பு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹட்கோ ஜெயராமன், வார்டு நிர்வாகிகள் பூங்கொடி, கவியரசு, கலைச்செல்வன், கருணாநிதி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...