பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்; உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா கோரிக்கை

பொள்ளாச்சியில் சிதலமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் சிரமம்.


கோவை: பொள்ளாச்சி, தேர்நிலையம் முதல் உஞ்சவேலம்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தென்மேற்கு பருவ மழையால் சிதலமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சியில் உள்ள தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியான உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, உடுமலையிலிருந்து வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உஞ்சவேலம்பட்டி அருகில் உள்ள தனியார் உணவகம் முன்பு சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் வரிசை கட்டி நிற்பதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கெனவே இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...