கோவை-நாகர்கோவில் இரயில் பாதையில் தற்காலிக மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு

கோவை-நாகர்கோவில் இரயில் அக்டோபர் 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளே இதற்கு காரணம்.


கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதையில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் இன்ஜினியரிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் அக்டோபர் 10 முதல் கோவை-நாகர்கோவில் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய வழித்தடத்தின்படி, கோவை-நாகர்கோவில் ரயில் (எண்: 16321) விருதுநகர், கரூர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக செல்லும். இந்த மாற்றம் அக்டோபர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும்.

இந்த வழித்தட மாற்றம் தற்காலிகமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...