உடுமலை அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலரும் காயமடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் (45), அவரது மனைவி பிரித்தி (40), மகன்கள் ஜெயப்பிரியன் (11), ஜீவப்பிரியன் (13) மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் நடந்த இறப்பு நிகழ்வுக்குச் சென்று திரும்பி வந்தனர்.



உடுமலை அருகே உள்ள கருப்புசாமி புதூர் பகுதியில், பாலக்காடு நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவல்ஸுடன் அவர்கள் பயணித்த பொலிரோ வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி பிரித்தி, மகன் ஜெயப்பிரியன் மற்றும் தாய் மனோன்மணி (65) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றும் மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

டெம்போ டிராவல்ஸில் பயணித்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பாலக்காட்டிற்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சோகமான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...