சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 6 மாத காலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 37.1 சதவீதம் அதிகமாகும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10,82,514 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 37.1 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,36,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தொடர்பாக 79,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட வழக்குகளில் 16.2 சதவீதமும், அபராதத் தொகையில் 20 சதவீதமும் அதிகமாகும்.

குழந்தைகளுக்கான டிக்கெட்டில் பெரியவர்கள் பயணித்தல், சாதாரண வகுப்பு டிக்கெட்டில் உயர் வகுப்பில் பயணித்தல், வேறு வகுப்பில் பயணம், சாதாரண ரயில் டிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தல், பயண தூரத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தல் உள்ளிட்ட முறைகேடான பயணங்களுக்கு 68,681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.71 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68.9 சதவீதம் அதிகமாகும்.

முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு சென்றதற்காக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் பொறுத்தவரை, முதல் வகுப்பு ஏ.சி.யில் ஒரு பயணி 70 கிலோ வரை இலவசமாகக் கொண்டு செல்லலாம். டயர் 2 ஸ்லீப்பர் அல்லது முதல் வகுப்புக்கு 50 கிலோ, ஏ.சி. 3 டயர் ஸ்லீப்பர் 40 கிலோ, ஸ்லீப்பர் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதல் சுமைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அக்டோபர் 8 அன்று வெளியிட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...