கோவை பன்னீர்மடையில் திருப்பதி பிரம்மோற்சவம் போல கருட சேவை: பக்தர்கள் திரண்டனர்

கோவை பன்னீர்மடையில் உள்ள மூன்று கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவம் போன்று கருட சேவை நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடையில் அமைந்துள்ள மூன்று முக்கிய கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவத்தை போன்று கருட சேவை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போன்று இங்கும் கருட சேவை நடத்தப்பட்டது.



முதலில் ஶ்ரீதேவி பூதேவி சமேதர உலகளந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெண் பக்தர்கள் கும்மியடித்தனர். பஜனை குழுவினரின் பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

பன்னீர்மடை கிராமத்தின் முக்கிய வீதிகளில் பெருமாள் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்தபோதிலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் செல்வராஜ், செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் டி.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டிருந்தனர். நிர்வாகிகள் பி.டி.கோபாலசாமி, செல்வராஜ், தம்பி பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயபால், பரணி, ஜெயசந்திரன், விஷ்வநாதன், பொன்னுசாமி, ராமசாமி ஆகியோரும் ஏற்பாடுகளில் உதவினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...