உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா

உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் தேவராட்டம் ஆடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட எத்தலப்பரின் முழு உருவ சிலையும், திருமூர்த்தி மலையில் அமைக்கப்பட்ட மணிமண்டபமும் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரியமான தேவராட்டம் ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி மற்றும் பொதுமக்கள் பலர் எத்தலப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட வீரரின் முழு திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...