உடுமலை அருகே அரசு பேருந்து மோதி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பலன் இல்லாமல் போனது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை அருகே உள்ள தாந்தோனி பகுதியில் தாராபுரம் சாலையில் இருந்து உடுமலையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், உடுமலையில் இருந்து தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் குரு பிரசாத் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.



எதிர்பாராத விதமாக அரசு பேருந்து குரு பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் குரு பிரசாத் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து போனதால் அவரால் உயிர் தப்ப முடியவில்லை.

உடுமலை அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த குரு பிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...