திருப்பூர்-கோவை சாலையில் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர்-கோவை சாலையில் காற்று வீச்சால் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து. காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டு குவிகிறது.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை இடையேயான சாலையில் ஒரு தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்துரைச் சேர்ந்த 32 வயதான சுரேந்திரன் இயக்கி வந்தார். பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவிநாசி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும்போது, அதிக காற்று வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி விழுந்தது. இதில் ஓட்டுனர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பட்டு படுகாயம் ஏற்பட்டது.

எனினும், தனக்கு ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுரேந்திரன் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பித்தனர்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் சுரேந்திரனை பாராட்டி, அருகிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை - திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்காக பயணம் செய்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...