கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் தொடர் மழை

கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அக்டோபர் 9 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கோவைப்புதூர், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...