காரமடை நகரில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பொதுக்கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.



காரமடை நகர கழகத்திற்குட்பட்ட பகுதிகளில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரவி, நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.R.சண்முகசுந்தரம், மாவட்ட அவை தலைவர் புருஷோத்தமன், காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காரமடை நகராட்சி, வார்டு எண்-17, சாஸ்திரி நகர் பகுதியில் ரூபாய் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய பொதுக்கழிப்பிட கட்டிடத்தை எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.



மேலும், வார்டு எண்-23 கார் ஸ்டேண்ட் அருகில் ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யானசுந்தரம், சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...