பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல சதி முறியடிப்பு - வங்கதேச குற்றவாளிகள் கைது

கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கடுமையாக எதிர்த்து போராடியவர் முருகானந்தம். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.

கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரிலும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைகளை செய்த இந்தக் கும்பல், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த தகவல் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...