கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சியை நடத்தியது. இதில் 28 பயணிகள் மற்றும் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்ததாக பாவனை செய்யப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் இணைந்து 'பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி'யை இன்று நடத்தியது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்று, ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார்.

பேரிடர்காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் 'கோல்டன் ஹவர்" என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.



இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பின்னர் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, "மஞ்சள் குறியீடு" (Code Yellow) அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அடுத்தடுத்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் என அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக ஒத்திகை செய்யப்பட்டது.



இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகை பயிற்சியில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை ரயில் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் ஈடுபட்டனர். தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இந்த பரபரப்பான ஒத்திகை காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் உற்று நோக்கினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...