ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Coimbatore: கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர்.

தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், மல்லி பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், அரளி பூ கிலோ ரூ.400, கோழி கொண்டை பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.



பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ.30, கரும்பு ஜோடி ரூ.150, மா இலை ரூ.30, பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

பூ வியாபாரி சங்கத்தின் துணைத் தலைவர் ஹக்கீம் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்திருந்தது. அதனால் அதிக விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், பொதுவான விலையிலேயே பூக்கள் கிடைக்கின்றன," என்று தெரிவித்தார்.

பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...