இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த குளம் 75 ஏக்கருக்கு மேல் பாசன வசதியை வழங்குவதுடன், பல கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பாசனம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து, 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இது பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.



தண்ணீர் திறப்பு நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பேசிய எம்பி ஈஸ்வரன், "இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சாமிநாதன், திட்டக்குழு தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் முயற்சியால் தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு என்பதற்கு இது ஒரு சான்றாகும்" என்றார்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து, மாடர்ன் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...