கோவை: திமுக பஞ்சாலைத் தொழிலாளர் சங்கச் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிப்பதாக குற்றச்சாட்டு

கோவையில் திமுக பஞ்சாலைத் தொழிலாளர் சங்கச் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்கச் சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.


கோவை: கோவை பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிக்க முயற்சிப்பதாகவும், சில சொத்துக்களை விற்பனை செய்திருப்பதாகவும் திமுக தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

திமுக தரப்பின் பார்த்தசாரதி கூறுகையில், கோவை பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் திருப்பூர் துரைசாமிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததாகவும் மேல்முறையீடு வழக்கில் மீண்டும் திருப்பூர் துரைசாமிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சங்கத்தின் தேர்தல் முறை தவறானது என சுட்டிக் காட்டியதாக கூறிய பார்த்தசாரதி, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

பார்த்தசாரதி மேலும் கூறுகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு, தான் உட்பட 5 பேர் மீது சங்கத்தின் பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக வழக்கு தொடரப்பட்டதாகவும் அந்த வழக்கு விசாரணை தற்போது JM2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

46 இடங்களில் சங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பதாகவும் அதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறினார். சங்கம் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தபோது, சங்கச் சொத்துக்களை விற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததாக கூறிய அவர், இந்நிலையில், சங்கத்தின் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிக்க முயற்சிப்பதாகவும் சங்கத்திற்கு சொந்தமான நான்கு சொத்துக்களை, சந்தை மதிப்பைவிட குறைவான விலைக்கு திருப்பூர் துரைசாமி கிரயம் செய்திருப்பதாகவும் விற்பனை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது துரைசாமியின் சொத்து இல்லை, திமுக தொண்டர்கள் கொடுத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து என்று கூறிய அவர், திருப்பூர் துரைசாமி, தனது தவற்றை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி கூறுகையில், சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று பார்த்தசாரதி வழக்கு நடத்தி வருவதாகவும் அதே போன்று சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று துரைசாமியும் வழக்கு நடத்தி வருவதாகவும் கூறிய அவர், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சங்கத்திற்கு சொந்தமான நான்கு சொத்துக்கள், சந்தை மதிப்பைவிட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது திருப்பூர் துரைசாமி, எந்த கட்சியிலும் இல்லை என்றும் எனவே சங்கத்தின் சொத்துக்களை திமுக தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...