பொள்ளாச்சி அருகே கேரள சுற்றுலா வாகனம் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 13 பயணிகள்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை பகுதியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாடு பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 13 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுடன் சுற்றுலாவிற்காக பொள்ளாச்சி வந்துள்ளனர்.

இக்குழுவினர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் பயணித்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்கள் பயணித்த வாகனத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.



இதனால் வாகனம் சாலையின் ஓரத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.



வாகனத்தின் பழுதை கவனித்த வாகன ஓட்டுனர் லாவகமாக வாகனத்தை கையாண்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்த தகவல் அறிந்த உடன் அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...