கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கோவை: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பதிவு செய்த Oceans of Knowledge நூல் வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.



இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக டாக்டர் லால் மோகன் பரவலாக அறியப்பட்டவர்.தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் உருவாக்கப்பட்ட Oceans of Knowledge நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.



நூலாசிரியரும், ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் சேர்பர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி, கோவை திருமண்டல துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசியோர், கடல் உயிரியல், கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காக்கும் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் டாக்டர் லால் மோகன் செய்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதன் மூலம் சிறப்பு பெற்றது.

இறுதியாக, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் நன்றி உரையாற்றினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...